தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி பாதையை வகுத்து அதில் பயணித்து வருபவர் நடிகர் அஜித்குமார் . யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வரும் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி என்ற படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் . இந்நிலையில் இந்த படத்தின் ,
அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. அதோடு நடிகர் அஜித்தும் பைக் டூர் என்று வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் இந்த படம் நின்று விட்டது என்று இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது . அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வந்தனர் .
இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பாளர் . அந்த வகையில் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ,
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கூறி இருந்தார் . அதில் மார்ச் மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வேண்டியது . ஆனால் தள்ளிப் போய்விட்டது . இதனால் இயக்குனர் மகிழ் திருமேனி இந்தப் படத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிக் கொண்டு வருகிறார். மேலும் விடாமுயற்சி திரைப்படம் லைக்கா நிறுவனத்திற்கு,
மிகவும் முக்கியமான படம். அதனால் இந்த படம் இனிமேல் தாமதமே ஆகாது என்று அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் . இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்…