May 1, 2024

ப யந் து பயந் து தா ன் வேட்டை யனா க நடித் தே ன் ..!! சந்தி ரமுகி 2 படப்பி டிப்பில் இது தான் நடந் த தா ..?? உண் மை யை சொ ல்லிய ராக வா லார ன் ஸ் ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடன கலைஞர் ஆவார் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த நடிகர்  ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். கடந்த 200 5 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் நல்ல வரவேற்பை பெற்றது . ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை.

இதனால் ராகவா லாரன்ஸை வைத்து எடுத்தார் இயக்குனர் பி வாசு . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் , கங்கனா ரனாவத் ,லட்சுமிமேனன், வடிவேலு ,சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், ரவி மரியா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்  லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஆஸ்கர் வென்ற ,

எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார் . மேலும் இந்த திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அப்படி அந்த நிகழ்ச்சியில் வேட்டையனாக நடித்தது குறித்து வெளிப்படையாக ,

பேசியிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ் . அதில் அவர் கூறியதாவது , சந்திரமுகி படத்தில் ரஜினி சார் வேட்டையன் கதாபாத்திரத்தை சிறப்பாக பண்ணியிருந்தார்.  அதனால் அதே கதாபாத்திரத்தை நான் செய்யும்போது அவருடைய பெயரை கெடுத்து விடக்கூடாது என்ற பயம் எனக்கு பெரிய அளவில் இருந்தது. இதனால்  படப்பிடிப்பில் ,

ஒவ்வொரு காட்சியிலும் அந்த பயம் எனக்கு இருந்தது.  இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் படத்தை தொடங்கியதால் இந்த திரைப்படம் சிறப்பாக முடிந்துள்ளது என்று அந்த நிகழ்ச்சியில்  கூறியிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *