சினிமாவை பொருத்தவரை அப்போதிலிருந்து இப்போது வரை முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . அதிலும் ஒரு சில நடிகர்களுக்கு ரசிகர் மன்றமும் இருக்கிறது. அப்படி அப்போது அஜித்துக்கும் மிகப்பெரிய ரசிகர் மன்றம் இருந்து வந்தது . ஆனால் திடீரென ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார் நடிகர் அஜித் . அதற்கு காரணம் சினிமா என்பது ,
பொழுதுபோக்கான விஷயம் . ஆனால் அதை ரசிகர்கள் அப்படி கருதுவதில்லை. நான் எப்படி வளர்கிறேனோ, அதே போல என்னுடைய ரசிகர்களும் வளர வேண்டும். இதற்கெல்லாம் தடையாக இருப்பது இந்த ரசிகர் மன்றம் தான் என்று அப்போதே கலைத்து விட்டார் நடிகர் அஜித் .
ஆனால் அஜித்துக்கு முன்பே ஒரு நடிகர் ரசிகர் மன்றத்தை கலைத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் கவுண்டமணி தான் . அந்த காலகட்டத்தில் நகைச்சுவை மன்னனாக கொடி கட்டி பறந்து வந்தார் நடிகர் கவுண்டமணி. அப்போது இவருக்கும்,
ரசிகர் மன்றம் இருந்ததாம் . ஆனால் ரசிகர் மன்றமே ஆகாது என்று விலகி விட்டாராம் கவுண்டமணி. அதுமட்டுமில்லாமல் அப்போது படத்தை பிடித்தால் பாருங்க இல்லையென்றால் போங்கடா என்று சொல்லுவாராம் கவுண்டமணி . அதோடு இவரும் விருதே வேண்டாம் ,
என்று வெளிப்படையாக கூறிவிட்டாராம் . என்னதான் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் கூட கவுண்டமணி மற்றும் அஜித்துக்கு மட்டும்தான் ரசிகர் மன்றத்தை கலைக்கும் அளவிற்கு தைரியம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…