நேற்று இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விதமாக நிலாவின் தென்துருவத்தில் சந்திராயன் 3 தரையிறங்கியது . இந்த விஷயத்தை நேற்று மொத்த இந்தியாவும் நினைத்து பெருமை பட்டார்கள் . அப்படி இந்த சந்திரயான் 3 உருவாக்கியதற்கு மொத்தம் 615 கோடி செலவாகியுள்ளது. ஆனால் இந்தப் குப்ப படத்தை எடுக்காமல் இருந்திருந்தால் இன்னொரு சந்திரயான்கூட விட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது .
அந்த படம் தான் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதி புரூஷ் திரைப்படம் . இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சையிப் அலி கான், கீர்த்தி சனன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்றது .
இதனால் இந்த வசூலில் நஷ்டத்தை தான் சந்தித்தது . மேலும் இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 700 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி இந்த குப்பை படத்தை எடுக்காமல் இருந்திருந்தால் இன்னொரு சந்திரயான் விட்டிருக்கலாம் என்று கலாய்த்து வருகின்றனர்…