சமீப காலமாக சினிமா நடிகர்களும் அரசியலில் களமிறங்குவதற்கு பெரிய அளவில் ஆகும் காட்டி வருகின்றனர். அப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களின் ஒரு சிலர் மட்டும் தான் ஜொலித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக,
கொடி கட்டி பறந்து வரும் நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர் . இந்நிலையில் சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய். தற்போது அதற்கான வேலைகளை தன்னுடைய ரசிகர் மன்றத்தை வைத்து செய்து வருகிறார் நடிகர் விஜய் .
இப்படியொரு நிலையில் ஒரு கோடி கொடுத்தால் விஜய் என்ன யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு கேட்பேன் என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் மன்சூர் அலிகான் தான் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்திருக்கிறார் ,
நடிகர் மன்சூர் அலிகான் . இதையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு கொடுப்பீர்களா.? என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது , ஒரு கோடி கொடுத்தால் விஜய் என்ன.? எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் ,
ஓட்டு கேட்பேன், நீ ஒரு அரசியல் பண்ணினால் அதை வைத்து நான் ஒரு அரசியல் பண்ணுவேன் என்று எப்போதும் போல அவருடைய பாணியில் நச்சென்று பதில் அளித்திருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் …