கௌதம் கார்த்திக் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . பிரபல மூத்த நடிகரான கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என்னமோ ஏதோ ,வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் ,ஹரஹர மகாதேவகி ,போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்,
நடிகர் கௌதம் கார்த்திக். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட இவருக்கு இன்னும் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனிடையே தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கௌதம் கார்த்திக் .
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் கார்த்திக் தன்னுடைய தந்தை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார் . அதில் அவர் கூறியதாவது, என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவை விட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் எங்களுடைய குடும்பமே,
தலைகீழாக மாறியது . அவரைப் பிரிந்து தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். அது மிகவும் கொடுமையாக இருந்தது . என்னுடைய அப்பாவை எப்பவாவது ஒருமுறைதான் பார்க்க முடியும் . இல்லையென்றால் வருசத்துக்கு ஒரு இரண்டு மூன்று முறை ஃபோனில் பேசுவார் அவ்வளவுதான் . மற்றபடி அவர் இல்லாத ,
குறையை என்னுடைய அம்மா தான் பூர்த்தி செய்தார் . அவரால் தான் நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகர் கௌதம் கார்த்திக்.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …