கஸ்தூரி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை கஸ்தூரி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து செந்தமிழ் பாட்டு, சின்னவர் ,புதிய முகம், அமைதிப்படை, இந்தியன், காதல் கவிதை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கஸ்தூரி.
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த நடிகை கஸ்தூரி ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் .
இப்படி இருக்கும் நிலையில் அண்மை காலமாக தேவையில்லாமல் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை கஸ்தூரி . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கஸ்தூரி கூறியதாவது , நான் ஒரு பேட்டிக்கு பதினைந்தாயிரம் வாங்குகிறேன் என்று என்னை பற்றி,
தெரியாதவர்கள் எல்லாம் கண்டபடி பேசி வருகிறார்கள் . அதற்காக நான் பத்தினி , உத்தமி என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருக்க முடியுமா.? இதையெல்லாம் நான் என்னுடைய சிறுவயதிலேயே பார்த்துவிட்டேன் . அதுவும் நடிகர் சங்க விழாவின் போது சரியான கூட்டம் ,
அப்போது என்னுடைய பின் புறத்தில் ஒருத்தன் கிள்ளினான் . உடனே நானும் அவனுடைய கையைப் பிடித்து கிள்ளினேன் . அவன் பயந்து போய் என்னை பார்த்து சாரி சிஸ்டர் என்று சொன்னான் . அவனுடைய மூஞ்சிலேயே காரி துப்பி விட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை கஸ்தூரி…