திவ்யதர்ஷினி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் ரசிகர்களால் டிடி என்று அழைக்கப்பட்டு வரும் திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் ,காபி வித் டிடி ,அச்சம் தவிர், அன்புடன் டிடி , எங்கிட்ட மோதாதே போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை,
திருமணம் செய்து கொண்டார் டிடி . இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது . ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அப்படி விவாகரத்தான பிறகும் தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டு வந்தார் டிடி . அதுவும் விஜய் டிவியின்,
செல்லப் பிள்ளையாக இருந்து வந்த தொகுப்பாளினி டிடி சமீபத்தில் விஜய் டிவியை விட்டு விலகியதாக அறிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார் டிடி. அந்த வகையில் , டிடி தொகுப்பாளினியாக இருக்கும் போது நீண்ட நேரம் நின்றதால் அவருக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம் .
இதனால் எங்கு சென்றாலும் வாக்கிங் ஸ்டிக் அல்லது வீல் சேர் மூலம் தான் செல்கிறாராம் . அது மட்டுமல்லாமல் இந்த நோயை குணப்படுத்தவும் முடியாதாம் . இதனால் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளான டிடி போதும்டா சாமி என்று விஜய் டிவியிலிருந்து விலகியதாக கூறியிருந்தார். அப்படி விஜய் டிவியில் ,
இருந்து விலகி இருந்தாலும் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் டிடி. அதோடு இவருக்கு மட்டும் இந்த நிலைமை கிடையாது தொகுப்பாளர்களாக இருக்கும் எல்லோருக்கும் இதே நிலைமை தான் என்றும், அவர்கள் யாரும் இதை வெளியே சொல்வதில்லை என்று கூறப்படுகிறது…