தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குனர் ராஜமௌலி . இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல்,
வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து அடுத்ததாக தெலுங்கு நடிகரான மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி . இந்த படத்தை முடித்த கையோடு பிரபல தமிழ் ஹீரோவுடன் இணைய உள்ளாராம் இயக்குனர் ராஜமௌலி .
அவர் வேறு யாரும் இல்லை உலகநாயகன் கமல்ஹாசன் தான் . விக்ரம் படத்திற்கு பிறகு கொடிக்கட்டி பறந்து கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற பிரம்மாண்டப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . அதுமட்டுமல்லாமல்,,
அடுத்தடுத்து இயக்குனர் மணிரத்னம் மற்றும் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இரண்டு படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் கமல்ஹாசன் . அந்தப் படங்கள் முடிந்ததும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட ,
ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகும் இந்த திரைப்படம் எந்த ஜானரில் வெளியாகும் என்று மட்டும் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் ராஜமௌலி யுடன் கமல்ஹாசன் இணையுள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்…