மறைந்த நடிகை சௌந்தர்யா ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டு வந்த தவிர்க்க முடியாத நடிகை ஆவார். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சௌந்தர்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சேனாதிபதி ,காதலா காதலா , அருணாச்சலம் ,
மன்னவரு சின்னவரு ,படையப்பா ,தவசி, சொக்கத்தங்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சௌந்தர்யா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும்,
ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லா முறை படங்களிலும் கலக்கிக்கொண்டு வந்த சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டார் . இவருடைய திடீர் மரணம் பபெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி கூறியதாவது, குஷ்பூ என்னுடைய வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவை தான் திருமணம் செய்து இருப்பேன் . எப்போதும் குஷ்புவிடம் அடிக்கடி கூறுவேன் ,
நான் மட்டும் சௌந்தர்யாவிடம் என்னுடைய காதலை சொல்லி இருந்தால் , அவர் இன்று உயிரோடு கூட இருந்திருக்கலாம் . சௌந்தர்யா ரொம்ப சிம்பிளான பொண்ணு என்று கூறியிருந்தார் சுந்தர் சி…