சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்னதான் ஆரம்பத்தில் புகைப்பிடிக்கும் காட்சியிலும் ,மது குடிக்கும் காட்சியிலும் நடித்திருந்தாலும் தற்போது அதெல்லாம் தவறு, நான் அதற்கெல்லாம் இப்போது அனுபவிக்கிறேன் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .
அதுமட்டுமல்லாமல் 72 வயது ஆகியும் கூட இன்னும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கலக்கிக் கொண்டு வருகிறார் ரஜினிகாந்த் . இதெல்லாம் சாதாரண விஷயமே கிடையாது .அதுவும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது .
அதற்கு காரணம் தன்னுடைய உடலையும் , மனதையும் அவ்வளவு பக்குவமாக வைத்திருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்வாராம் .இதன் பிறகு உடற்பயிற்சி,
யோகாசனங்கள் செய்து வருவார். மேலும் தவறான எண்ணம் ஏதாவது வந்தால் உடனே குரு மந்திரத்தை சொல்வாராம் . அது மட்டுமல்லாமல் 430 கோடிக்கு சொந்தக்காரரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தரையில்தான் படுத்து தூங்குவாராம். என்னதான் ,
அவரிடம் இவ்வளவு வசதிகள் இருந்தாலும் அவருக்கு எளிமையாக இருப்பது தான் எப்போதும் பிடிக்கும்மாம் . இதைபார்த்த ரசிகர்கள் இது போன்ற நல்ல விஷயங்கள் தான் இவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றது என்று வியப்பில் கூறிவருகின்றனர் …