April 27, 2024

எனக்கு பணம் காசு கூட வேண்டாம் ..!! இது மட்டும் போதும் ..!! கடவுளிடம் சூப்பர் ஸ்டார் வைத்த ஒரே வேண்டுதல் இது தானா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  சாதாரண கண்டக்டராக இருந்து வந்த ரஜினிகாந்த் இன்று இந்திய அளவில் ஒரு பிரபலமாக இருந்து வருகிறார் . இதற்குக் காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் , விடா முயற்சியும்  தான் . குறிப்பாக கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர் என்ற அந்தஸ்தில்,

இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.இன்னும் சொல்லப்போனால் 72 வயதிலும் கூட தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார் ரஜினிகாந்த் . அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது .

மேலும் இவர் நடிப்பை தாண்டி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . குறிப்பாக மனநிம்மதிக்காக அடிக்கடி இமயமலை சென்று வருவார் . அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுளிடம் அதிகம் வேண்டுவது இது,

ஒன்று மட்டும் தானாம் . அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் ஆன்மீகம் குறித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது , கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரார்த்தனை செய்வார்கள் .

ஆனால் எனக்கு கடவுளிடம் இருக்கும் ஒரே வேண்டுதல் எப்போதுமே உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் மனதை கொடு என்று தான் நான் கேட்பேன் என்று கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *