April 27, 2024

சூர்யா – ஜோ காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் ..!! சமாதானப்படுத்தி கல்யாணத்தை நடத்தி வைத்த பிரபல இயக்குனர் ..!! என்னா மனுஷன்யா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் சூர்யா மற்றும் ஜோதிகா . கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.  இதன் பிறகு உயிரிலே கலந்தது ,காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு  ஒரு காதல் போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இப்படி பல வருடங்களாக காதலித்து வந்த சூர்யா தன்னுடைய தந்தையான சிவகுமாரிடம் தன்னுடைய காதலை பற்றி சொல்லியிருக்கிறார் . ஆனால் சிவகுமார் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் . இதனால் சிவகுமார்,

சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருக்கிறோம் என்று கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சூர்யாவும் ,ஜோதிகாவும் காத்துக் கொண்டிருந்தார்களாம் . இதன் பிறகு இறங்கி வந்த சிவகுமார் இவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது .

ஆனால் உண்மையில் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு சிவகுமாரிடம் சம்மதம் வாங்கியதே பிரபல இயக்குனர் தானாம் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் . தன்னுடைய காதலை ஏற்காததால் சில நாட்கள் கௌதம் வாசுதேவ் மேனன் வீட்டில்,

தங்கி இருந்தாராம் சூர்யா . இதன் பிறகு சிவகுமாரிடம் பேசி சூர்யா ஜோதிகாவின் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் . இந்த தகவலை பேட்டி ஒன்றில் சிவகுமாரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *