விஜய் தொலைக்காட்சியால் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் புகழ். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்ட புகழ் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் வெளியான ,
சிக்ஸர் ,சபாபதி, என்ன சொல்லப் போகிறாய் ,வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம் ,யானை, டிஎஸ்பி ,அயோத்தி, ஆகஸ்ட் 16 1947 போன்ற பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார் . அது மட்டுமல்லாமல் தற்போது ஹீரோவாகவும் ,
ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் புகழ் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் விஜயகாந்த் இறந்த அன்றே நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்த புகழ்,
இரண்டாவது முறையாக அஞ்சலி செலுத்த வந்திருந்தார் . அப்போது பேசிய புகழ் , விஜயகாந்த் ஐயா இதுவரை ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார். பசி என்று வரும் அனைவருக்குமே அவர் சாப்பாடு போட்டு இருக்கிறார். இதனால் இன்று முதல் நானும் அதை கடைபிடிக்க உள்ளேன்.
அந்த வகையில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்க உள்ளேன். இதை வாழ்நாள் முழுக்க செய்வேன் என்று விஜயகாந்த் நினைவிடத்தில் வந்து ஆசீர்வாதம் வாங்கி சென்று இருக்கிறார் புகழ். இதைப் பார்த்த ரசிகர்கள் புகழின் செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…
View this post on Instagram