April 28, 2024

ஒ ரே பாட்டில் கல்லா க்கட் டிய தம ன்னா ..!! குத் தாட்ட ம் போட் ட தற்கு இ த்த னை கோ டி சம் பள மா ..?? பார பட்சம் பார்க் காம ல் அள்ளி க்கொ டுத்த ஜெயில ர் தயாரி ப்பா ளார் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா.  கேடி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்பு குறைந்ததும் அக்கட தேசமே கதி என்று இருந்து வந்த தமன்னா பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன்,  விநாயகன் , வசந்த் ரவி, சுனில் யோகி பாபு , போன்ற பல பிரபலங்கள் ,

நடித்துள்ளனர் . இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக நடிகர்,  நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் இந்த படத்திற்காக ரஜினி 80 கோடி  சம்பளமாக வாங்கினாராம் .இவரைத் தொடர்ந்து ,

நடிகர் சிவராஜ் குமார் 4 கோடியும் , சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோகன்லால் 8 கோடியும் , ஜாக்கிசரஃப் 4 கோடியும் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் . அது மட்டுமில்லாமல் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெறும் 80 லட்சம் தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் .ஆனால் நடிகை தமன்னாவுக்கு மட்டும் ,

பாரபட்சம் பார்க்காமல் சம்பளத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறாராம்  தயாரிப்பாளர் கலாநிதி மாறன் . அந்த வகையில் ஜெயிலர் படத்தில் குத்தாட்டம் போட்டதற்காக மூன்று கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம் நடிகை தமன்னா. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரே பாட்டில் கல்லாக்கட்டி விட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *