தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்பு குறைந்ததும் அக்கட தேசமே கதி என்று இருந்து வந்த தமன்னா பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு ,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் , வசந்த் ரவி, சுனில் யோகி பாபு , போன்ற பல பிரபலங்கள் ,
நடித்துள்ளனர் . இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த படத்திற்காக ரஜினி 80 கோடி சம்பளமாக வாங்கினாராம் .இவரைத் தொடர்ந்து ,
நடிகர் சிவராஜ் குமார் 4 கோடியும் , சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோகன்லால் 8 கோடியும் , ஜாக்கிசரஃப் 4 கோடியும் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் . அது மட்டுமில்லாமல் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெறும் 80 லட்சம் தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் .ஆனால் நடிகை தமன்னாவுக்கு மட்டும் ,
பாரபட்சம் பார்க்காமல் சம்பளத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் . அந்த வகையில் ஜெயிலர் படத்தில் குத்தாட்டம் போட்டதற்காக மூன்று கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம் நடிகை தமன்னா. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரே பாட்டில் கல்லாக்கட்டி விட்டார் போல என்று கூறி வருகின்றனர்…