தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி சமீப காலமாக ஒரு சில நடிகர்கள் எங்களுக்கு எல்லாமே அஜித் சார் மட்டும்தான் என்று நெகிழ்ச்சியில் கூறி வருகின்றனர். அந்த வகையில் அப்பா அம்மாவுக்கு பிறகு எனக்கு அஜித் சார் தான் என்று வெளிப்படையாக ,
கூறியுள்ளார் ஒரு நடிகர் . அவர் வேறு யாருமில்லை நடிகரும் , இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா தான் . ஆரம்பத்தில் உதவியகுளராக பணியாற்றி வந்த எஸ் ஜே சூர்யாவுக்கு முதல் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அந்த வகையில் இவர்களுடைய கூட்டணியில் வெளியான ,
வாலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . இதன் பிறகு தான் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக கலக்கிக் கொண்டு வந்தார் எஸ் ஜே சூர்யா . ஆனால் தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில்,
பேசிய எஸ் ஜே சூர்யா அஜித் குறித்து கூறியதாவது, எனக்கு அப்பா அம்மாவுக்கு பிறகு அஜித் சார் மட்டும்தான். அவர் ரொம்ப தங்கமான மனசு கொண்டவர். நான் வாலி படத்தில் இயக்குனராக கமிட்டான உடன் என்னை எல்லோரிடமும் அறிமுகப்படுத்துவார். குறிப்பாக என்னுடைய ,
தோளில் கை போட்டுக் கொள்வார். ஆனால் அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பண்ணி இருப்பானா என்பது சந்தேகம் தான் . இருந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் ஒரு விளக்கேற்றி வைத்தவர் அஜித் சார் தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் எஸ் ஜே சூர்யா…