தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரம் . பல வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் விக்ரம் இதுவரை எந்த நடிகருடனும் பகைத்துக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார் . அப்படி இருந்தும் கூட ஒரு பிரபலத்துடன் விக்ரமுக்கு 20 வருட பகை இருந்ததாம். ஆனால் அதையும் தாண்டி அவருக்கு உதவி செய்திருக்கிறார் .
அவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் வி ஏ துரை தான் . கடந்த 2000 ஆண்டு வெளியான என்னம்மா கண்ணு என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் தயாரிப்பாளர் வி ஏ துரை. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்திருந்தார் வி ஏ துரை.
அப்படி கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தையும் தயாரித்திருந்தார் வி ஏ துரை. அப்படி பிதாமகன் படம் வெளியான பிறகும் விக்ரமுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் தராமல் வி ஏ துரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அவரிடம் பேசாமல் இருந்து வந்தாராம் நடிகர் விக்ரம். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பி ஏ துரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் சினிமா பிரபலங்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் .
இதைத் தெரிந்த பலரும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தபோது நடிகர் விக்ரம் 20 வருட பகையை மறந்து அவருக்கு உதவி செய்திருக்கிறாராம் . அப்படி விக்ரம் செய்த உதவியை நினைத்து வி ஏ துரையும் கண்கலங்கி நன்றி சொன்னாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர் …