May 3, 2024

விஜயகாந்தின் நினைவிடத்தில் இப்படியா செய்வது ..?? டிடிஎஃப் வாசனால் கடுப்பான கேப்டன் ரசிகர்கள் ..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா ..??

கடந்த மாதம் 28 ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்மையெல்லாம் விட்டு சென்று விட்டார் என்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் இறந்தபோது ஒரு சில பிரபலங்கள் மட்டுமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.  இதை அடுத்து தற்போது கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு கூட்டம் கூட்டமாக பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.

அதுவும் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் வந்து கண்ணீர் விட்டு கதறியதெல்லாம் நன்றாகவே தெரிகிறது நடிப்பு என்று.  இப்படி இருக்கும் நிலையில் வளர்ந்து வரும் ஹீரோவான டிடிஎஃப் வாசன் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி,

செலுத்தியிருக்கிறார் . மேலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த யூடியூபராக இருந்து வரும் டிடிஎஃப் வாசன் தற்போது இயக்குனர் செல் ஆம் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இதை அடுத்து கேப்டன் விஜயகாந்தின்,

நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய டிடிஎஃப் வாசனிடம் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் அலைமோதியுள்ளனர் . மேலும் ரசிகர்களை அவமதிக்கக் கூடாது என்பதற்காக டிடிஎஃப் வாசனும் ரசிகர்களுடன் செல்பி எடுத்து இருக்கிறார். இதை பார்த்த விஜயகாந்தின் ரசிகர் ஒருவர்,

செல்பி எடுக்கிற இடமா இது .? யாராயிருந்தாலும் அடிச்சிடுவேன் பார்த்துக்கோங்க என்று மிரட்டி இருக்கிறார் . இதனால் அந்த இடத்தில் கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.  இதன் பிறகு டிடிஎஃப் வாசன் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *