தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்தி வருகின்றனர் . ஆனால் அஜித் ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே அதிசயமாக இருந்து வருகிறது . அப்படி துணிவு படத்திற்கு பிறகு சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகினார் நடிகர் அஜித். இந்தப் படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார் .
இந்த படத்தை முடித்த கையோடு மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் அஜித் கமிட்டாகுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவனை போலவே அவரையும் தூக்கிவிட்டு ,
தெலுங்கு பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம் நடிகர் அஜித் . அவர் வேறு யாருமில்லை தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் தான். தெலுங்கில் வெளியான டான் சீனு, பாடிகார்ட், வின்னர் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்த கோபிசந்த் சமீபத்தில் பாலய்யாவை,
வைத்து வீர சிம்ஹா ரெட்டி என்ற படத்தை இயக்கியிருந்தார் . இவர் தான் அடுத்ததாக அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர் . இதற்கு முன்பு விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்,
போன்ற நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தனர் . ஆனால் இவர்கள் நடித்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடையே மோசமான வரவேற்பை தான் பெற்றது . அந்த காரணத்தினால் தான் அஜித் ரசிகர்கள் வேண்டாம் என்று கூறுவதாக பேசப்படுகிறது…