April 28, 2024

த மிழ் சினி மாவிற் கு இன் னொரு ரகுவ ரன் கிடை ச்சாச் சு ..!! அவரு டைய ஜெரா க்ஸ் போல வாழ் ந்து வரு ம் நடி க ர் ..!! பெரு மையா க சொல்லி ய பிரப ல இயக் குன ர் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சத்தமே இல்லாமல் எல்லோரையும் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் மிரட்டியவர் தான் நடிகர் ரகுவரன் . அந்த காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பேச்சை தகர்த்தெறிந்தவர் நடிகர்  ரகுவரன்.  இப்படி காலம் கடந்தும் பேசப்படும் ரகுவரனை போல தற்போது இன்னொரு நடிகர் மிரட்டி வருகிறார் .

அவர் வேறு யாருமில்லை நடிகர் அர்ஜுன் தாஸ் தான். கடந்த 2019 ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான  கைதி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான  நடிக ர் அர்ஜுன் தாஸ் இந்த படத்தை  தொடர்ந்து அந்தாகாரம் ,மாஸ்டர் ,புத்தம் புது காலை விடியாதா, விக்ரம், அநீதி போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார் . மேலும் இவர் பெரிய அளவில் பேசப்பட்டதற்கு காரணமே அவருடைய கணீர் குரல் தான் . அப்படி மறைந்த வில்லன் நடிகர் ரகுவரன் போல தான்  அர்ஜுன் தாஸும் இருக்கிறார் . இதனால் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு ரகுவரன் கிடைத்துவிட்டார் என்று பெருமையாக பேசி இருந்தார் இயக்குனர் வசந்த பாலன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *