தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் ஏ ஆர் ரகுமான் அவர்கள் . ஆரம்பத்தில் இளையராஜா போன்ற பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்த ஏ ஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார்.
இப்படி வெளியான முதல் திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார் ஏ ஆர் ரகுமான் . இதன் பிறகு இவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது . பின்னர் பல மொழி படங்களுக்கும் இசையமைத்து,
வந்தார் ஏ ஆர் ரகுமான் . அது மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதையும் கூட வென்று இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். இப்படி இருக்கும் நிலையில் பிறப்பால் ஹிந்துவாக பிறந்த ஏ ஆர் ரகுமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மதம் மாறும் போது,
ஏற்பட்ட விஷயங்களை கூறியிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது, நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது நான் எந்த ஒரு சமூக அழுத்தத்தையும் எதிர் கொள்ளவில்லை. மேலும் இந்தியர்கள் அனைவருமே அரவணைத்து வாழ்பவர்கள் தான் நாட்டில் உள்ளவர்கள்,
எல்லோருமே வாழு வாழ விடு என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் இந்த அரசியலால் தான் நாட்டில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் ஏ ஆர் ரகுமான். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …