சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு , பகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ், லால், அழகம்பெருமாள் ,விஜயகுமார், ரவீனா ரவி போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் .
இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது . அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த பகத் பாசிலை சம்பந்தமே இல்லாமல் ரசிகர்கள் கொண்டாடி வந்தது அப்போது மிகப் பெரிய பரபரப்பை ,
ஏற்படுத்தி இருந்தது . ஆனால் இந்த படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை . இதனால் மிகப்பெரிய வேதனையில் இருந்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் 50 ஆவது நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது .
அப்படி அந்த விழாவில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் . இந்நிலையில் அந்த விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் கூறியதாவது , அந்த காலத்தில் 100 நாள் ,200 நாள், முன்னூறு நாள் என்று வெற்றி விழா கொண்டாடி வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் வெறும் 50 நாட்கள் ஓடினாலே,
அலப்பறை செய்கிறார்கள் என்று மாமன்னன் படத்தை மறைமுகமாக கலாய்த்து இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். உடனே அங்கிருந்த உதயநிதி ஸ்டாலின் மனசுல என்ன தான் திட்டுறீங்க னு நல்லாவே தெரியுது என்று கூறியிருந்தார் …