பொதுவாகவே சினிமாவை பார்த்து தான் ரசிகர்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகின்றனர் . அதிலும் குறிப்பாக நடிகர்கள் ஸ்டைலுக்காக புகைபிடிப்பதை தவறாக எண்ணாமல் ஸ்டைலாகவே எண்ணி ரசிகர்களும் அந்த பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அப்படி ரசிகர்களை அதிகம் பாதித்த நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் . தன்னுடைய தலைவரே ,
சிகரெட் பிடிக்கிறார் என்று ரசிகர்களும் அதையே செய்து வந்தனர். இப்படி இருந்த நேரத்தில் ரஜினியின் பாபா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது . ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ரஜினி புகைப்பிடிப்பது , மது அருந்துவது போன்ற காட்சிகளில்,
சர்வ சாதாரணமாக நடித்திருப்பார் . இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்தனர் . இதனால் தன்னுடைய ரசிகர்கள் கெட்டுவிடக்கூடாது என்று பாபா படத்தோடு சிகரெட் தண்ணிக்கு எல்லாம் கும்பிடு போட்டு விட்டார் ரஜினி . அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் இது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை ரஜினி.
இந்நிலையில் இவரைப் போன்று நடிகர் விஜயும் பல திரைப்படங்களில் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கினார். அப்படி கடைசியாக சர்கார் படத்தின் போது இந்த பிரச்சனை காட்டு தீப் போல பரவியது . இதன்பிறகு திருந்தி விட்டேன் என்று கூறிவந்த விஜய் சமீபத்தில் வெளியான லியோ போஸ்டரில் ,
புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் கொடுத்த வாக்கையே விஜயால் காப்பாற்ற முடியவில்லை, இதில் இவர் வேற அரசியலுக்கு வருகிறாரா என்றெல்லாம் கூறி வருகின்றனர் . மேலும் இதுவரை விஜய் மீது இருந்த நல்ல பெயர் இந்த ஒரு போஸ்டரால் அப்படியே சரியா தொடங்கியது…