தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான ரீ என்ட்ரியை கொடுத்திருந்தார் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதை தொடர்ந்து பல திரைப்படங்களில்,
நடித்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன் . மேலும் ஏற்கனவே இரண்டு திருமணமான கமல்ஹாசன் நடிகை கௌதமியுடன் இணைந்து நம்மவர், குருதிப்புனல் ,தேவர் மகன் ,அபூர்வ சகோதரர்கள் ,பாபநாசம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல்,
சில வருடங்கள் இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையிலும் இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய ரகசியம் கௌதமிக்கு மட்டும்தான் தெரியும் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் கமல்ஹாசன் .
அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, விஸ்வரூபம் படத்தின் போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்பட்டது . அப்போது மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்த கமல்ஹாசன் நேரடியாக வீட்டுக்கு வந்து தூங்கி விட்டாராம்.
அப்படி எப்போது கோபம் வந்தாலும் உடனே தூங்கி விடுவாராம் . அப்போது தான் அந்த பிரச்சனை தீருமாம் . இந்த ரகசியம் நடிகை கௌதமிக்கு மட்டும்தான் தெரியும் என்றும், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் சொல்கிறேன் என்றும் கூறியிருந்தார் நடிகர் கமல்ஹாசன்…