May 8, 2024

சூப் பர் ஸ் டார் பட்ட மே எனக்கு வேண் டா ம் ..!! என க்கு பய மே இந் த ரெ ண்டு பேரை நி னைத் து தா ன்..!! வெளி ப்படை யாக சொல் லிய ரஜி னிகா ந்த் ..!!

தற்போது  தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.  தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர்  என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ் குமார் ,மோகன் லால் ,ரம்யா கிருஷ்ணன், தமன்னா ,விநாயகன் ,யோகி பாபு ,சுனில் , வசந்த் ரவி ,

போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் . பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது . மேலும் அண்மை காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி தான் பரபரப்பாக நிலவிக் கொண்டு வருகிறது . அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் மற்றும்,

சிவகார்த்திகேயன் தான் என்று பேசப்பட்டது . இது குறித்து ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரஜினிகாந்த் . அதில் அவர் கூறியதாவது , ஜெயிலர் படத்தின் பாடலை பார்த்தபோது எனக்கு மிகவும் பிடித்தது . ஆனால் அந்தப் பாடலில் ,

சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் எடுக்க சொன்னேன்.  இன்னும் சொல்லப் போனால் சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே எனக்கு தொல்லை தான்.  அந்த பட்டமே வேண்டாம் என்று நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு பண்ணினேன்.  ஆனால் ரஜினி பயந்துவிட்டார் என்று,

பலரும் பேசினார்கள் . ஆனால் நான் பயப்படுவது இரண்டு பேருக்கு மட்டும்தான்.  ஒன்று கடவுள்,  இன்னொன்று நல்லவர்கள் என்று கூறியிருந்தார் ரஜினி.  இதை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் இவர் இன்னும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *