தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டு வந்தவர் மாரிமுத்து. ஆரம்பத்தில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இதன் பிறகு புலிவால் என்ற படத்தை இயக்கியிருந்த மாரிமுத்து பின்னர் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தார் .
அப்படி தமிழில் வெளியான நிமிர்ந்து நில் ,கொம்பன் ,கடைக்குட்டி சிங்கம் ,புலிக்குத்தி பாண்டி ,பரியேறும் பெருமாள் ,விக்ரம் ,சமீபத்தில் வெளியான ஜெயிலர் போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் மாரிமுத்து. இப்படி இத்தனை படங்களில்,
நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு எதிர்நீச்சல் சீரியலில் கிடைத்தது தான் ஆச்சிரியமே . அந்த வகையில் இந்த சீரியலில் ஏஜிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் மாரிமுத்து. ஆனால் 57 வயதான மாரிமுத்து இன்று மாரடைப்பால்,
உயிரிழந்தது திரை பிரபலங்கள் உட்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…