தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் நடிப்பிற்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்த சூர்யா தன்னுடைய படங்கள் மூலம் எல்லா விமர்சனத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று , ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு,
நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைஅடுத்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 48வது பிறந்த நாளை,
கொண்டாடி இருந்தார் நடிகர் சூர்யா . ஆனால் அவருடைய பிறந்தநாளில் பரிதாபமாக இரண்டு உயிர் போனது தான் சோகமே . அந்த வகையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் இருவர் பெரிய பேனர் ஒன்றை கட்டிக்கொண்டு இருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் பிளக்ஸ் பேனரில் இருந்த இரும்பு பிரேமில் மின்சாரக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்களாம். அப்படி இறந்து போன இரண்டு பேருமே கல்லூரி மாணவர்களாம். தற்போது இரண்டாம் ஆண்டு ,
படித்துக் கொண்டு வருகிறார்களாம் . மேலும் சினிமா நடிகர்கள் தங்களுக்காக எதையும் செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் ரசிகர்கள் இதுபோன்ற செயல்களை செய்து அவர்களுடைய குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர்…