கடந்த மாதம் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும் . அது மட்டுமல்லாமல் இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கிட்டத்தட்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர் . இது எல்லாத்துக்குமே ஒரே காரணம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ,
வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தது தான் . மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே அதிகம் அள்ளிக் கொடுத்தவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் . இதனால் தான் அவர் இறந்த பின்பும் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் இறப்பதற்கு முன்பே அவருடைய மனைவியான பிரேமலதாவை தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இப்படி இருக்கும் நிலையில் காசி விஸ்வநாதர் கனவில் ,
தோன்றி விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று சங்கீத சொன்னதாக சாமியார் ஒருவர் விஜயகாந்தின் சமாதிக்கு வந்திருக்கிறார் . அப்போது பேசிய அந்த சாமியார் , விஜயகாந்த் எங்கேயும் போகவில்லை உங்களுடைய மூத்த மகன் உருவத்தில் உங்களோடு தான் இருந்து வருகிறார்.
இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது என்ன பத்தி நல்லா தெரியும் இல்ல, ஏழை மக்களை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் என்று விஜயகாந்த் குரலில் பேசி இருந்தார் அந்த சாமியார்…