எண்பதுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நளினி . கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நளினி தொடர்ந்து உயிருள்ளவரை உஷா ,மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம் ,நான் பாடும் பாடல் ,நூறாவது நாள், 24 மணி நேரம் ,உறவை காத்த கிளி , பிள்ளை நிலா போன்ற பல திரைப்படங்களில் ,
நடித்திருந்தார் நடிகை நளினி . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நளினி. திருமணமான இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . பின்னர் கடந்த 2000 வருடம் ராமராஜனும் நளினியும் விவாகரத்து ,
பெற்று பிரிந்து விட்டனர் . இதன் பிறகு நடிகை நளினி வெள்ளித்திரை மற்றும் சின்னை த்திரையில் நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நளினி இருவரும் எதற்காக பிரிந்தோம் என்று கூறியிருந்தார் .
அந்த வகையில் நடிகை நளினி கூறியதாவது , என்னுடைய கணவர் நல்ல உழைப்பாளி , தெரியாம என்னை காதலித்து விட்டார் . அதனால் தான் நாங்கள் திருமணம் செய்ய வேண்டியது ஆகிவிட்டது . ஆனா திருமணத்துக்குப் பிறகு ரெண்டு பேருக்குமே ஒத்துப் போகல.
அதனால்தான் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் . அப்படி இருந்தும் கூட அவரை நான் இப்போதும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் , அது அவருக்கும் தெரியும் என்று வெளிப்படையாக அந்த பேட்டியில் கூறியிருந்தார் நடிகை நளினி…