தமிழ் சினிமாவை கலக்கி வந்த தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வைகைப்புயல் வடிவேலு. தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு பல பேரின் வயிற்றில் அடித்தார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . மேலும் வடிவேலு சினிமாவில் காட்டும் முகம் வேறு, சினிமாவிற்கு வெளியில் காட்டும் முகம் வேறு என்று ,
அவருடன் நடித்த நடிகர்களே வெளிப்படையாக கூறி வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு இதுவரை எந்த ஒரு உதவியும் வடிவேலு செய்ததே கிடையாதாம் . அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் வடிவேலுவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த,
கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு கூட எட்டி பார்க்கவில்லை வடிவேலு . இந்த ஒரு காரணத்தினால் வடிவேலுவின் மீது பலரும் கோபத்தில் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் வடிவேலு உடன் ஒரு சில படங்களில் நடித்திருந்த நடிகர் கொட்டாச்சி கூறியதாவது,
வடிவேலுவுக்கு யார் கை தட்டுறாங்களோ, அவர்களை மட்டுமே கூட வச்சு பாரு . அவருக்குன்னு ஒரு தனி குரூப் இருக்கு . அவங்கள தவிர வேறு யாருடனும் அவர் நடிக்க மாட்டார். அதோடு வடிவேலுவை பொறுத்தவரை அவருடன் நடிப்பவர்கள் சிறப்பாக நடிக்க கூடாது என்று,
தான் நினைப்பார் , ஆனால் அதையும் மீறி யாராவது நன்றாக நடித்து விட்டால் அவர்களை பின்னால் நிற்க வைத்து விடுவார் என்று கூறியிருந்தார் கொட்டாச்சி…