தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் . கடந்த 45 வருடமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வரும் சூப்பர் ஸ்டார் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள ,
புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென மாலத்தீவுக்கு கிளம்பி சென்று விட்டாராம் ரஜினிகாந்த் . அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தொடர் தோல்வி படங்களால் துவண்டு போய் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.
அந்த நேரத்தில் தான் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ஆனது. இதன் பிறகு சூப்பர் ஸ்டாரை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அந்த படப்பிடிப்பில் தான் ஒரு புதிய குண்டை ஒன்றை போட்டுள்ளாராம் ஐஸ்வர்யா. அது என்னவென்றால் அந்த படத்தின் உதவி இயக்குனர் ஒருவரை காதலிப்பதாகவும்,
அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சூப்பர் ஸ்டாரிடம் சொல்லி உள்ளாராம். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான சூப்பர் ஸ்டார் இங்கு இருந்தால் அடிக்கடி மனவளச்சல் ஏற்படும் என்று கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருப்பதற்கு மாலத்தீவுக்கு சென்றிருக்கிறாராம்.
குறிப்பாக கோடி கோடியாக பணம் இருந்தும் கூட நிம்மதி இல்லாமல் சுற்றி வருகிறாராம் சூப்பர் ஸ்டார். இந்த தகவலை பத்திரிக்கையாரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கே இப்படி ஒரு நிலைமையா.? பாவம் மனுஷன் என்று புலம்பி வருகின்றனர்…