தமிழ் சினிமா உலகில் விவேக் , வடிவேலுவுக்கு பிறகு முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் என்றால் அது சந்தானம் தான். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடியனாக நடித்து கலக்கி கொண்டு வந்தார் சந்தானம் .அதுவும் ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாத அளவிற்கு பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவர் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை,
நடித்தால் ஹீரோ தான் என்று முடிவெடுத்தார் . இதன் பிறகு முழுக்க முழுக்க ஹீரோவாகவே நடித்துக் கொண்டு வந்தார் . ஆனால் சமீப காலமாக அவருடைய திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இப்படி இருக்கும் நிலையில் தற்போது டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சந்தானம்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்தானம் நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மீண்டும் காமெடி நடிகராக நடிப்பதற்கு தயார் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் . இதைப் பார்த்த ரசிகர்கள் நல்லவேளை இப்போதாவது ஹீரோ மயக்கத்தில் இருந்து தெளிந்தாரே என்று கூறி வருகின்றனர்…