தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் தரமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சாய் பல்லவி . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்னுடைய அழகால் கவர்ந்து விட்டார். இதன் பிறகு தமிழில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என் ஜி கே ,பாவ கதைகள் , கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்,
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கையும் இருக்கிறார் . இவர் தமிழில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் 31 வயதாகியும் இன்னும் சாய் பல்லவிக்கு,
திருமணம் நடக்காத நிலையில் அவருடைய தங்கைக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம் . அந்த வகையில் சமீபத்தில் தான் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்திருந்தார் சாய் பல்லவியின் தங்கை . தற்போது சாய்பல்லவி தங்கை நிச்சயதார்த்தத்திற்கு,
ரெடியாகும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அக்கா இருக்கும்போது எப்படி தங்கை திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…