April 27, 2024

நட்பு ன்னா இப்ப டித்தா ன் இரு க்க ணும் ..!! சிவ கார்த்தி கேயனு க்காக வி ஜய் சே துபதி செ ய்த விஷயம் ..!! எ ன்ன மனு ஷன்யா ..?? ரசி கர் களை நெ கிழ வைத்த சம்ப வம் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு துருவ நட்சத்திரங்களின் போட்டி நிலவிக் கொண்டுதான் வருகிறது . அப்படி அந்தக் கால முன்னணி நடிகர்களான எம் ஜி ஆர்- சிவாஜி தொடங்கி ரஜினி- கமல் , விஜய் -அஜித் ,சூர்யா- விக்ரம், சிம்பு- தனுஷ்  என்று வரிசையாக  பல நடிகர்களை சொல்லலாம் . அந்த வரிசையில் உள்ளவர்கள் தான் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி.

இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து சாதித்து காட்டியவர்கள்.  குறிப்பாக நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.  அதற்கு ஒரு உதாரணமாக இதை சொல்லலாம் .

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாவீரன் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன்  இணைந்து அதிதி சங்கர் ,மிஷ்கின் ,சரிதா ,யோகி பாபு ,சுனில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்தப் படத்தை மண்டேலா பட இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.

  இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார் . இதுவும் இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருந்தது . இப்படி இருக்கும் நிலையில் எல்லா மொழிகளிலும் பிசியான நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்திற்காக மூன்று நாட்கள்,

கால் சீட் கொடுத்து டப்பிங் பேசியிருந்தாராம் . ஆனால் இதற்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லையாம்.  இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் மீது உள்ள நட்புதான் என்று கூறப்படுகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் நட்புன்னா இப்படித்தான் இருக்கணும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *