நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி அரசியலில் களமிறங்குவதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நேரத்தில் அவருடைய வலது கையால் அவருக்கே பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விஜயின் வலது கை என்று அழைக்கப்படுபவர் தான் புஸ்ஸி ஆனந்த் .
இவர்தான் விஜய் ரசிகர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வருகிறார் . குறிப்பாக நடிகர் விஜய் இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறாராம் . அப்படி இருக்கும்போது புஸ்ஸி ஆனந்தின் நடவடிக்கையால் விஜய்க்கு கெட்ட பெயர் வந்துள்ளது. அது என்னவென்றால் சமீபத்தில் 234 தொகுதிகளில் உள்ள ,
நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார் நடிகர் விஜய் . அப்போது விஜய்க்காக ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மேலும் விஜயின் கூட்டம் என்றால் கண்டிப்பாக பிரியாணி தானா ம். அப்படி இருக்கும்போது வெறும் சைவ விருந்து மட்டும் தான் கொடுத்திருந்தார்களாம் .
அது மட்டுமல்லாமல் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றவுடன் புஸ்ஸி ஆனந்தின் நடவடிக்கைகளிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். அதாவது மன்ற நிர்வாகிகளையே மிரட்டுவது, தேவையில்லாமல் ரசிகர்களை காலில் விழ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு,
வருகிறாராம் புஸ்ஸி ஆனந்த் . இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம். மேலும் இந்த விஷயம் நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கும் ஒரு பிரச்சனையாக அமையலாம் என்று கூறப்படுகிறது…