தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய் . இதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக அரசியலில் களம் இறங்குவதற்காக ,
தீவிரமாக வேலை செய்து வருகிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் சமீபத்தில் 234 தொகுதிகளிலும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி இருந்தார் நடிகர் விஜய். இதனால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு,
தேர்தலுக்காக இப்போதே தன்னுடைய ரசிகர்களை தயார் செய்து வருகிறார் நடிகர் விஜய். அப்படி அண்மையில் கூட தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் சந்தித்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கு வலதுகரமாக இருக்கும் புஸ்சி ஆனந்த் கண்டிப்பாக,
விஜய் அரசியலுக்கு வருவார் என்று உறுதி அளித்துள்ளார் . இப்படி இருக்கு நிலையில் விஜய் கட்சி தொடங்கினால் சின்னமாக இதுதான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அது என்னவென்றால் மெர்சல் படத்தில் விஜய்யை கைது செய்யும்போது ,
அவர் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணக்கம் செய்வது போல ஒரு காட்சி இருக்கும் . அதையே தற்போது சின்னமாக வைக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்களாம். இது குறித்து விஜய் என்ன முடிவு செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…