April 27, 2024

சிவகா ர்த் திகேய ன் அள விற்கு வரவே ண்டிய நடி கர் ..!! குடியா ல் காணா மல் போன து தான் சோக மே..!! தலை கீ ழாக மாறி ப்போ ன சி னிமா வாழ்க் கை ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கலங்கி கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . இப்படி தமிழ் சினிமாவை கலக்கி வரும் சிவகார்த்திகேயன் அளவிற்கு வரவேண்டிய ஒரு நடிகர் குடியால் காணாமல் போனதுதான் சோகமே.

அவர் வேறு யாருமில்லை நடிகர் விமல் தான்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம்,வாகை சூடவா,  கலகலப்பு போன்ற,

பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் விமல் . மேலும் இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.   அப்போது சிவகார்த்திகேயனை விட விமலுக்கு தான் ,அதிக மார்க்கெட் இருந்து வந்ததாம்.  ஆனால் இதன் பிறகு,

விமலின் கவனம் திசை மாறியது . அதுவரை படங்களில் நடித்து வந்த விமல் ஒரு படத்தை அவரே தயாரித்து இருந்தார் . அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது . இதனால் பெரும் கடனுக்கு ஆளான விமல் குடிக்கு அடிமையானாராம் . இதன் பிறகு கதைத் தேர்விலும் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார் .

இதனால் அவருடைய சினிமா வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கிறது . இதன் பிறகு தான் அவருடைய மனைவி இவரை பழைய படி மாற்றி இருக்கிறாராம் . மேலும் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த விமல் சமீப காலமாக நல்ல நல்ல கதை களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *