சசிகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சசிகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் , இயக்குனராகவும் அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ,
தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் சசிகுமார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு கடந்த 13 வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை சசிகுமார் .
இதன்பிறகு முழு நேர நடிகராகவே இருந்து வருகிறார் நடிகர் சசிகுமார். இப்படி இருக்கும் நிலையில் 13 வருடங்கள் கழித்து மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார் சசிகுமார் . அந்த வகையில் சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி,
15 வருடம் ஆகிறது . அந்தப் படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் சசிகுமார். அதில் அடுத்த படம் குறித்த தகவலை விரைவில் கூறுவேன் என்று கூறியிருந்தார் . மேலும் இந்த படத்தில் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன்,
ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல வருடங்கள் கழித்து சசிகுமார் படம் எடுக்க உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் …
It’s like yesterday. 15 years of Subramaniapuram. The memories are still fresh. You all didn’t just approve of the film but celebrated it. On this remarkable day I want to share the news with you all that I’m starting up my next directorial venture#15YearsOfSubramaniyapuram pic.twitter.com/trGxMkn56V
— M.Sasikumar (@SasikumarDir) July 4, 2023