தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் . இவர் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகரின் அம்மா மகன் ஆவார் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்தை பெற்றார் . தற்போது இவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்திலும் வசூல் நாயகன் என்ற அந்தஸ்திலும்,
இருந்து வருகிறார் . இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் விஜய் . இதை அடுத்து தற்போது அடுத்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் விஜய். அது என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு ,
ஜோசப் விஜய் என்றுதான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்தார் விஜய். அது மட்டுமல்லாமல் தன்னுடைய படத்தில் தொடர்ந்து கிறிஸ்துவ மத குறியீடுகளை பயன்படுத்தி வந்தார் . ஆனால் தற்போது விஜய் அறிவித்திருந்த தமிழக வெற்றி கழகம் அறிக்கையில் விஜய் என்று,
மட்டும் தான் தன்னுடைய பெயரை பயன்படுத்தி இருக்கிறார் . அதோடு தன்னுடைய நெற்றியில் குங்குமம் வைத்திருந்த புகைப்படத்தையும் அதில் பதிவிட்டு இருக்கிறார் . இதைப் பார்த்த தயாரிப்பாளர் கே ராஜன், உங்களுடைய பெயருக்கு முன்னால் இருந்த ஜோசப் இப்ப எங்கே போனது.
அறிக்கையில் உள்ள புகைப்படத்தில் நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறீர்கள், இதையெல்லாம் எதை குறிக்கிறது.? உங்களுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டுதான் அரசியலுக்கு வர வேண்டுமா .? உங்களுடைய மதத்தை மறந்து விட்டீர்களா .? என்று விமர்சித்திருக்கிறார்…