தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் . இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் அவருடைய விடாமுயற்சியும் , தன்னம்பிக்கையும் தான். இப்படி இருக்கும் நிலையில்,
தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் , அயலான் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி நடிகை ஒருவர்,
நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகை மிருணாள் தாகூர் தான். ஆரம்பத்தில் ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படத்தில் சீதா என்ற,
கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . அப்படி அந்த படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த நடிகை மிருணாள் தாகூர் சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் சீரிஸில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார் .
இதனால் ரசிகர்களுக்கு இவர் மீது ஒரு தவறான பிம்பம் எழுந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேர்ந்தால் இவருடைய கேரியருக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடும் என்று கதாநாயகியை மாற்றங்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…