April 30, 2024

எனக் கு பின் னாடி வந்த வன் தா ன் சூரி ..!! ஆ னா இ ப்ப ஹீ ரோ ஆகிட் டா ன்..!! பொ றா மையில் பொ ங் கிய பிர பல நடி க ர் ..!!

சூரி அவர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  இதன்பிறகு ரசிகர்களால் “பரோட்டா சூரி ” என்று அழைக்கப்பட்டார் . இப்படி அறிமுகமான குறிப்பிட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத காமெடி நடிகராக,

கலக்கிக் கொண்டு வந்தார் சூரி . இப்படி பிஸியான காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்த சூரி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது . இப்படி இருக்கும் நிலையில்,

எனக்கு பின்னாடி வந்தவன் தான் சூரி , ஆனா இப்ப ஹீரோ ஆகிட்டான் என்று பொறாமையில் பொங்கி இருக்கிறார் ஒரு நடிகர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் மீசை ராஜேந்திரன் தான் .தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும் , துணை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் மீசை ராஜேந்திரன்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மீசை ராஜேந்திரன் எனக்கு பின்னாடி வந்த சூரிக்கு இப்படி ஒரு வாய்ப்பா.?  ஒரு காலத்தில் என்னை விட கம்மியான சம்பளம் தான் வாங்கிக் கொண்டிருந்தார் . ஆனால் பத்து வருடத்திற்கு பிறகு அப்படியே எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது . நான் இன்றும் படப்பிடிப்பிற்கு ,

பஸ்ஸில் தான் போகிறேன் . ஆனால் அவர் பிளைட்டில் போய்க்கொண்டிருக்கிறார் . இதை எல்லாம் கேட்கும் போது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.  இருந்தாலும் என்னிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் . அதை சீக்கிரம் மாற்றிக்கொள்வேன் என்று கூறியிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *