ஓவியா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஓவியா கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் தான்.
இந்த திரைப்படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மன்மதன் அம்பு ,முத்துக்கு முத்தாக,மெரினா ,கலகலப்பு ,மூடர் கூடம், மதயானை கூட்டம், யாமிருக்க பயமே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஓவியா .அதோடு இவர் ,
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஓவியா ஒரு கட்டத்தில் பட வாய்ப்பில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி இவரை,
பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மோசமான கதைக்களங்களை தேர்வு செய்து மீண்டும் பட வாய்ப்பு இழந்தார் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து,
வருவதாக கூறப்படுகிறது.இருந்தாலும் எப்படி இருக்கிறார் , என்ன செய்கிறார் என்ற எந்த தகவலும் தெரியாத அளவிற்கு தான் இருந்து வருகிறார் நடிகை ஓவியா. இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…