தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வந்த பல பிரபலங்கள் படம் தயாரித்து பின்னர் பெரும் கடனாளி ஆகியுள்ளனர் . அந்த வகையில் சிவகார்த்திகேயன், கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் இயக்குனரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கௌதம் மேனன் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ,
மின்னலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் கெளதம் மேனன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா ,
என்னை அறிந்தால் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன் . அதன் பிறகு அவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா , துருவ நட்சத்திரம் போன்ற படங்களை தயாரித்து மிகப்பெரிய கடனாளியாக மாறினார் கௌதம் மேனன் .
இன்னும் சொல்லப்போனால் தற்போது இயக்குனர் கௌதம் மேனனுக்கு 60 கோடி கடன் இருக்கிறதாம் . அது அவருடைய தனிப்பட்ட கடன் இல்லை என்றாலும் , அவருடைய படங்களுக்காக வாங்கிய கடன் என்பதால் தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராக ,
பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் கௌதம் மேனன் . குறிப்பாக இந்த பிரச்சனையால் தான் இவருடைய துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது …