கடந்த வாரம் முழுவதும் மன்சூர் அலிகான் பஞ்சாயத்து தான் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது . ஒரு வழியாக ஐவரும் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்தார் . ஆனால் இவருக்கு முன்பே வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய பல தமிழ் பிரபலங்கள் உள்ளனர் . அந்த வகையில் முதலாவதாக உள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தரமாக நடித்துக் கொடுக்கும்,
பிரகாஷ்ராஜ் சந்திராயன் 3 நிலவை நோக்கி சென்ற போது தேவையில்லாமல் பேசி ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் . இவரைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சித்தார்த்,
சாய்னா நோவல் குறித்து பேசி பெரிய வம்பில் சிக்கினார் . இவரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத வில்லனாக கலக்கிக்கொண்டு வந்த ராதாரவி பொது மேடைகளில் நடிகர் , நடிகைகளை எல்லாம் போடா ,போடி என்று பேசி,
தன்னுடைய பெயரையே கெடுத்துக் கொண்டார் . இந்த லிஸ்டில் கடைசியாக உள்ளவர் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் . தமிழ் சினிமாவில் வெளியான பல நல்ல படங்களை இயக்கியிருக்கும் மிஷ்கின் சமீபகாலமாக கொஞ்சம் திமிராகவே நடந்து கொண்டு வருகிறார் ,
என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஒரு சில இயக்குனர்கள் தங்களுடைய பிரமோஷனுக்காக இவரை அழைத்து தனக்குத்தானே சூனியமும் வைத்துக் கொள்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது …