இன்று தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் தான் இருந்து வருகிறார் . இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் என்று சொன்னாலும் இன்னொரு காரணம் அவருடைய அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் தான் . அந்த வகையில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மனம் தன்னுடைய மகனை,
ஹீரோவாக்கினார் எஸ் ஏ சந்திரசேகர் . அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. பின்னர் விஜய் நடிக்கும் செந்தூரப்பாண்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சொல்லி விஜயகாந்தை கேட்டு இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர் . விஜயகாந்தும் மறுக்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு தான் விஜய் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்தார் . அதோடு இந்த படத்துக்காக விஜயகாந்த் சம்பளம் கூட வாங்கவில்லையாம் . அந்த அளவிற்கு விஜய் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் விஜயகாந்த் . இப்படி இருக்கும் நிலையில்,
தற்போது விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நேரத்தில் விஜய் அவரை பார்க்க வரவில்லை , அவர் நன்றி மறந்து விட்டார் என்று பலரும் கூறி வந்தனர் . ஆனால் விஜய் தன்னுடைய விசுவாசத்தை லியோ ,
வெற்றி விழாவில் காட்டி இருக்கிறார். அந்த வெற்றி விழாவில் பேசிய விஜய், ஒரே புரட்சித் தலைவர் தான், ஒரே நடிகர் திலகம் தான் ,ஒரே கேப்டன் விஜயகாந்த் தான் என்று ரஜினி, கமலுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்தின் பெயரைச் சொல்லி ரசிகர்களை உச்சிக்குளிர வைத்தார் விஜய்…