சமந்தா ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை சமந்தாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,
தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது. இதன்பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . விவாகரத்துக்கு பிறகு அரியவகை நோயால் படாத பாடுபட்டு வந்தார் நடிகை சமந்தா .
இப்படி இருக்கும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை சமந்தா. மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சினிமாவை விட்டு விலக இருப்பதாக அறிவித்திருந்தார் நடிகை சமந்தா .
அந்த வகையில் அப்படி சொல்லியது போலவே செய்துவிட்டார் சமந்தா. அந்த வகையில் தன்னுடைய மன அமைதிக்காக கோவில் கோயிலாக செல்ல தொடங்கி விட்டாராம்.அந்த வகையில் சமீபத்தில் வேலூரில் இருக்கும் தங்க கோவிலுக்கு சென்று இருந்தார் சமந்தா . அதன் பிறகு கோவையில் இருக்கும் ஈஷா யோகா ,
மையத்திற்கு வந்திருக்கிறார் நடிகை சமந்தா . குறிப்பாக மன அமைதி கிடைக்கும் வரை சமந்தா சினிமாவிற்கு வர மாட்டார் என்று கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்ப இனிமேல் சமந்தாவை படங்களில் பார்க்க முடியாதா என்று வேதனையில் கூறி வருகின்றனர்…