தமிழ் சினிமா உலகில் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படி வெளியான திரைப்படம் அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது . இதனால் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாதத்தை தொடங்கினார் இயக்குனர் பி. வாசு .
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் . இதனால் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் பி வாசு . அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து,
கங்கனா ரனாவத் ,வடிவேலு ,ராதிகா, லட்சுமிமேனன் ,சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்தப் படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படமே ஓடுமா.? ஓடாதா .? என்ற கேள்வி இருந்து வரும் நிலையில் சந்திரமுகி மூன்றாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே நடிப்பார் என்றும் ,
அதற்கான கதை வேலைகளை தற்போது இயக்குனர் பி வாசு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …