எப்போதும் ஏதாவது சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன் . இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகை சரக்கு தம்மெல்லாம் அடிப்பார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அவர் வேறு யாரும் இல்லை நடிகை சதா தான். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ,
கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சதா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், அந்நியன் ,திருப்பதி ,உன்னாலே உன்னாலே ,புலி வேஷம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சதா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,
கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிய அளவில் அமையவில்லை . இப்படியொரு நிலையில் இவருடைய மறுபக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
அந்த வகையில் நடிகை சதா அவருடைய கெட்ட பழக்கத்தால் தான் அவருடைய சினிமா வாழ்க்கையை இழந்தாராம். மேலும் படப்பிடிப்பில் கூட நடிகை சதா புகை பிடிப்பாராம். அதை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன் என்றுகூறியிருந்தார் பயில்வான் . அதுமட்டுமில்லாமல் அவர் போதை பழக்கத்திற்கு,
அடிமையானதால் ஒரு சில படங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டார் . இந்த காரணங்களால் தான் அவருக்கு யாருமே பட வாய்ப்பு கொடுப்பதில்லை என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நடிகை இப்படிப்பட்டவரா என்று கூறி வருகின்றனர்…