தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலமும் பெற்றுக் கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் கல்யாணமாகி ஒரு வருடமான நிலையில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தார் ,
தொல்லை கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் விக்னேஷ் சிவனின் தந்தை அவருடைய அண்ணன் தம்பிகளை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் சிவனின் சித்தி தன்னுடைய கணவருக்கு உதவ யாரும் இல்லை என்றும் சொத்தை மீட்டுத் தரும்படி ,
விக்னேஷ் சிவனின் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது புகார் கொடுத்துள்ளாராம் . ஏற்கனவே விக்னேஷ் சிவன் அவர்களுடைய கல்யாணத்துக்கு கூப்பிடவில்லை என்று உறவினர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பியுள்ளது நயன்தாராவுக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது…