தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் பின்னர் படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் . இதன் பிறகு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர் ,
சமீபத்தில் கொச்சையாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஆதி மற்றும் ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் பார்ட்னர். இந்த படத்தில் ரோபோ சங்கரும் நடித்திருக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா,
சென்னையில் நடைபெற்றது . அந்த விழாவில் பேசிய நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது, ஹன்சிகா மோத்வானி ஒரு மெழுகு பொம்மைதான் . மேலும் படத்தின் ஒரு காட்சியில் நான் ஹன்சிகாவின் காலை தடவுவது போல ஒரு காட்சி இருந்தது . ஆனால் அந்த காட்சியில் நான் நடிக்கவே மாட்டேன் என்று ,
கூறிவிட்டார் ஹன்சிகா. குறிப்பாக நானும் இயக்குனரும் அவருடைய காலில் விழாத குறையாக கெஞ்சினோம் . அப்போது கூட முடியவே முடியாது என்று கூறிவிட்டார் . அதோடு ஹீரோ மட்டும் தான் என்னை தொட்டு நடிக்கணும், வேற யாரும் என்னை தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார் .
அப்போதுதான் நினைத்து பார்த்தேன் , ஹீரோ எப்போதும் ஹீரோ தான், காமெடியன் எப்போதும் காமெடி யன் தான் என்று, இருந்தாலும் மேடை நாகரிகம் இல்லாமல் ஹன்சிகாவின் காலை தடவ வேண்டும் என்றெல்லாம் ரோபோ சங்கர் கொச்சையாக பேசியதால் அந்த இடமே கொஞ்ச நேரம் சலசலப்பு ஆனதாம் …